நோன்பின் சட்டங்கள் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



aslamvtrs 295 நாள் முன்பு (http://alifboys.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.
(அல்குர்ஆன் 2:185)

நோன்பின் நோக்கம்:
'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ,தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி,இப்னுமாஜா.