போடா போ!....... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Ambaladiyal 275 நாள் முன்பு (http://rupika-rupika.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மண் சுமந்து வளர்த்த உடல்
மனமுடைந்து கிடக்கையிலே
பண்பிழந்து வாழ்பவரை இன்னும்
பாசம் உள்ளவர் என்பீரோ !!!......

விண் மீனை விலைபேசும்
வீறுகொண்ட தந்தையாக
எந்நாளும் உளைத்தவரை
எடுத்தெறிந்து பேசுபவரை

கண் என்று கருதியதும்
அவன் கால்பிடித்து முகந்ததுவும்
என்னென்று சொல்வது இதுதான்
பெற்ற மனம் பித்தென்பதோ!......

முள்ளுக்கு வேலி போட்டு
முடிந்தவரை காவல் நிண்று
தள்ளாடும் வயதில்தான்
தன் தவறு இங்கு புரிந்ததுவோ!....